Posts

Showing posts from August, 2017

காரசாரமான... குட்டநாடன் மீன் குழம்பு

Image
ஆந்திராவைப் போலவே கேரள உணவுகளும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் கேரளாவில் மீன் குழம்பு தான் மிகவும் பிரபலமானது. அதிலும் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம்.  சரி, இப்போது அந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  மீன் - 1 கிலோ  புளி (குடம்புளி) - 4 துண்டுகள்  உப்பு - தேவையான அளவு  தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்  கடுகு - 1/2 டீஸ்பூன்  வெந்தயம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிது  சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)  பூண்டு - 6-7 (நறுக்கியது)  இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது) காஷ்மீரி மிளகாய் தூள் - 1-2 டேபிள் ஸ்பூன்  மல்லித் தூள் - 1 டீஸ்பூன்  மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் செய்முறை:  முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குட...

பீன்ஸ் உசிலி செய்ய தெரிந்து கொள்வோம்....

Image
தேவையானப்பொருட்கள்: பீன்ஸ் - 1/4 கிலொ (நீளவாக்கில் நறுக்கியது) துவரம் பருப்பு - 1/2 கப் கடலைப் பருப்பு - 1/2 கப் காய்ந்த மிளகாய் - 3 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் சாம்பார் தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்) எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை நன்றாகக் களைந்து, நீரை  வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக மசால் வடைக்கு  அரைப்பது போல அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை  வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள பீன்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, சிறிது  நீரைத் தெளித்து வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்...

சிக்கன் தால் ரெசிபி

Image
சிக்கனை எப்போதும் ஒரே மாதிரி கிரேவி, மசாலா என்று செய்து அழுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பாசிப்பருப்பு சேர்த்து சமையுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையைத் தரும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.  சரி, இப்போது அந்த சிக்கன் தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  சிக்கன் - 250 கிராம் பச்சை  மிளகாய் - 2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை - சிறிது  தக்காளி - 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்ழுன்  உப்பு - தேவையான அளவு பாசிப்பருப்பு - 1/2 கப்  தண்ணீர் - 2-3 கப்  கொத்தமல்லி - சிறிது தாளிப்பதற்கு...  நெய் - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை:  முதலில் பாசிப்பருப்பைக் கழுவி நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். அதே சமயம் சிக்கனையும் சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.  பின்னர் ...

ஆரோக்கியம் தரும் வெந்தய குழம்பு செய்ய...!

Image
தேவையான பொருட்கள்: வெந்தயம் - 4 தேக்கரண்டி வரமிளகாய் - 4 மல்லி - 3 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 8 பல் புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு தேங்காய் துருவல் - அரை கப் கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு செய்முறை:  வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வரமிளகாய், மல்லி, சீரகம் இவை மூன்றையும் வறுத்து அரைக்கவும்.  தேங்காயை தனியாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் 6 தேக்கரண்டி ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். ஊற வைத்த வெந்தயத்தை வடிகட்டி வாணலியில் போட்டு வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து  வதக்கவும். அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதினை போட்டு வதக்கவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும். புளியை கரைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும். அடுப்பை குறைத்து வைத்து கொதிக்கவிடவும். எண்ணெய் தெளிந்தது மேலே  வந்தவுடன் இறக்கவும்.

தனிச்சுவை கொண்ட கிராமத்து வஞ்சிர மீன் குழம்பு செய்ய...

Image
மீன் குழம்பு என்றாலே மிகவும் சுவையாக இருக்கும், அதிலும் கிராமத்து மீன் குழம்பு என்றால் தனிச்சுவை கொண்டதாக  இருக்கும். தேவையான பொருட்கள்: மீன் - ½ கிலோ நல்லெண்ணெய் - தேவையான அளவு கடுகு - 1 டிஸ்பூன் சிறிய வெங்காயம் - 5 வெந்தயம் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - சிறிது புளி - 1 எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை: மீனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி வைத்து, புளியை ½ மணி நேரம்  தண்ணீர் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வரமிளகாய், தனியா, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொண்டு அதில் சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் போல செய்துக்  கொள்ள வேண்டும். சிறிய வெங்காயத்தை அரைத்து அதனுடன் ஊறவைத்திருந்த புளிச் சாற்றினைக் கலக்கவும். பின்பு வாணலில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், வெந்தயம்,  தக்காளி போட்டு தாளித்து, பச்சை மிளகாய் பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அரைத்து வைத்திருந்த பேஸ்ட் ...

வயிறு பிரச்சனைகளுக்கு சுகம் தரும் சுக்கு குழம்பு!!

Image
தேவையான பொருட்கள்:  சுக்கு - ஒரு சிறிய துண்டு  மிளகு - 2 டீஸ்பூன்  வெந்தயம் - ஒரு டீஸ்பூன்  கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு  சின்ன வெங்காயம் - 200 கிராம்  தக்காளி - 2  மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை:  * புளியை நன்றாக கரைத்து கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  * சின்ன வெங்காயம் சிறிது வதங்கியதும் இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் புளிக்கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.  * குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிந...

முருங்கைக்கீரை பொரிச்சகுழம்பு செய்ய...!

Image
தேவையானப்பொருட்கள்: முருங்கைக்கீரை - ஒரு கட்டு பயத்தம் பருப்பு - 1/2 கப் சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 2 தனியா - 1 டேபிள்ஸ்பூன் மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் தாளிக்க: எண்ணை - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக). செய்முறை: முருங்கைக்கீரையை உருவி, அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். முருங்கைக்கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீரைச்  சேர்த்து, 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விடவும்.  பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து, ஒரு கொதி வரும் வ...

மூளைக் குழம்பு

Image
தேவையான பொருட்கள்: ஆட்டு மூளை  மஞ்சள் தூள் - 2 சிட்டிகை மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி தேங்காய் - 2 பத்தை உடைத்த கடலை - ஒரு கைப்பிடி சீரகம், பட்டை, சோம்பு - அரை தேக்கரண்டி வெங்காயம் - 2 பூண்டு - 10 பல் புளி - எலுமிச்சை அளவு தயிர் - 1 தேக்கரண்டி தேங்காய்ப்பால் - 1 மூடி எண்ணெய் - தேவையான அளவு கொத்துமல்லி, கறிவேப்பிலை செய்யும் முறை: முதலில் மூளையை தண்ணீர் விட்டு கழுவி அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் மூளை வெந்ததும் அதன் மேல் ஜவ்வை எடுத்துவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு, பட்டை, சோம்பு, போன்றவற்றை வறுத்து, அதனுடன் நறுக்கிய தேங்காய், மிளகாய் தூள், உடைத்த கடலை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூளை துண்டுகள், அரைத்த மசாலா, நறுக்கிய வெங்காயத்தில் பாதி, பூண்டு, உப்பு, தயிர், தேங்காய் பால் கல‌ந்து வைத்துக் கொள்ளவும்.  பின்னர் குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் குழ...

மீன் ஊறுகாய் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா...?

Image
தேவையான பொருட்கள்: மீன் - 1/2 கிலோ (முள் அதிகம் இல்லாத மீன்) மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி  மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி  வெந்தய பொடி - 1 மேஜைக்கரண்டி பூண்டு - 1 இஞ்சி - ஒரு சிறிய துண்டு  வினிகர் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு  கடுகு - 1 மேஜைக்கரண்டி  கறிவேப்பில்லை - சிறிது  நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை: இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல்  மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற  வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு பொன்  நிறமாக வறுத்து தனியே வைக்கவும்.    மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி  வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயபொடி, உப்பு சேர்த்து கிளறி  அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டு...

பக்கோடா குழம்பு செய்ய...

Image
தேவையான பொருள்கள்: பக்கோடா - 100 கிராம்  மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி  உப்பு - தேவையான அளவு    சாக வறுத்து அரைக்க - மிளகாய் வத்தல் - 3 முழு தனியா - 3 மேஜைக்கரண்டி  சீரகம் - 1 தேக்கரண்டி  பட்டை - 1 இன்ச் அளவு  கிராம்பு - 2 அரைக்க வேண்டியவை: தேங்காய் துருவல்  - 50 கிராம்  தக்காளி - 1 கொத்தமல்லி - சிறிதளவு  தாளிக்க தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி  பட்டை - 1/2 இன்ச் அளவு  கிராம்பு  - 1 வெங்காயம் - 1 கறிவேப்பிலை - சிறிது செய்முறை: வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். கடாயில் மிளகாய் வத்தல், முழு தனியா, சீரகம், பட்டை, கிராம்பு  எல்லாவற்றையும் லேசாக வறுத்து ஆறிய பிறகு மிக்ஸ்சியில் பொடித்து கொள்ளவும். தேங்காய், தக்காளி, கொத்தமல்லி மூன்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள பொடிகள் மற்றும் மஞ்சள் தூள் சேர...

ருசியான நாட்டுக்கோழி குழம்பு செய்ய வேண்டுமா...!

Image
தேவையான பொருள்கள்: நாட்டுக்கோழி - 1/2 கிலோ  தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 தயிர்  - 2 மேஜைக்கரண்டி  இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி  மல்லித்தழை - சிறிது  கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி  மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி  உப்பு - தேவையான அளவு வறுத்து அரைக்க வேண்டியவை: மிளகாய் வத்தல் - 5 கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி  சீரகம் - 1 மேஜைக்கரண்டி  மிளகு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் துருவல் - 100 கிராம்  தாளிக்க தேவையான பொருட்கள்: எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி  பட்டை - 1 இன்ச் அளவு  கிராம்பு - 2 பெரிய வெங்காயம் - 1 கறிவேப்பிலை - சிறிது செய்முறை:  கோழி துண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும். தக்காளி, வெங்காயம் மற்றும் மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், மிளகு எல்லாவற்றையும் போட்டு கிளறி அடுப்பை அணைத்து, ஆற விட்டு மிக்ஸ்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும். தேங்காயையும் நன்கு வறுத்து மிக்ஸ்சியில் அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்...

பன்னீர் ஸ்டஃப்டு குடைமிளகாய் செய்வது எப்படி?

Image
தேவையான பொருட்கள்: குடைமிளகாய் - 4 ஸ்வீட்கார்ன் - 1 கப்  உருளைக்கிழங்கு - 3 வெங்காயம் - 2  பன்னீர் - அரை கப்  மாங்காய் - சிறியது 1 மஞ்சள்தூள், இஞ்சி விழுது - தலா 1 தேக்கரண்டி மிளகு, சீரகத்தூள் - தலா 1 தேக்கரண்டி சோயா சாஸ், தக்காளி சாஸ் - தலா 2 தேக்கரண்டி கார்ன்ஃப்ளார் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு செய்முறை: ஸ்வீட்கார்ன், உருளைக்கிழங்கை இரண்டையும் தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை மட்டும் மசித்து  கொள்ளவும். கொத்தமல்லி, வெங்காயம், மாங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பன்னீரை துருவிக் கொள்ளவும்.  கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி விழுது, வெங்காயம் நற்காக வதங்கியதும் இதில் வேகவைத்த ஸ்வீட்கார்ன், மாங்காய் சிறிதாக் நறுக்கியது, மசித்த உருளைக்கிழங்கு, பன்னீர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து  வதக்கவும். பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். இதை அடுப்பிலிருந்து இறக்கி  கொத்தமல்லித் தழை தூவி கலந்து வைக்...

மட்டன் தொக்கு செய்ய தெரிந்து கொள்வோம்...

Image
தேவையான பொருட்கள்: மட்டன் - 1/4 கிலோ தனியாத் தூள் - 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி சீரக தூள் - 1 மேஜைக்கரண்டி சோம்பு தூள் - 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி தயிர் - 2 மேஜைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது தாளிக்க: பட்டை - 1 கிராம்பு - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி செய்முறை: மட்டன், மஞ்சள்தூள், தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடிதாக  நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்  பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம்  பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.  பிறகு மிளகாய் தூள், தனியாத் தூள், சீரகப் தூள், சோம்பு தூள் சேர்த்து கிளறவும். அதனுடன் ஊற வைத்த மட்டனை சேர்த்து 5 - 10 நிமிடம் நன்றாக கிளறவும். மட்டனில் இருந்து தண்ணீர் வரும். அதனால் தண்ணிர் சேர...

பூசணிக்காய் கூட்டு செய்ய வேண்டுமா....!

Image
தேவையான பொருட்கள்: பூசணிக்காய் - 150 கிராம்  மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி  அச்சு வெல்லம் - சிறிதலவு உப்பு - தேவையான அளவு அரைக்க தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி  பச்சை மிளகாய் - 2 சீரகம் - 1 தேக்கரண்டி  சின்ன வெங்காயம் - 4 (நறுக்கியது)     தாளிக்க தேவையான பொருட்கள்: எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி  கடுகு - 1/2 தேக்கரண்டி  உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி  நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு  கறிவேப்பிலை - சிறிது செய்முறை: பூசணிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.                           அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், அச்சு வெல்லம் மற்றும் 50 மில...

கொண்டைக்கடலை குருமா செய்ய தெரியுமா...!

Image
தேவையான பொருள்கள்: வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/ 2 தேக்கரண்டி சென்னா மசாலா தூள் - 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி மேத்தி இலை - சிறிது (காய்ந்த வெந்தய இலை) கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு அரைக்க தெவையான பொருட்கள்: தேங்காய் துருவல் - 100 கிராம் முந்திரிப்பருப்பு - 5 தாளிக்க தேவையான பொருட்கள்: எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி பட்டை - 2 கிராம்பு - 2 பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 செய்முறை: கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 4 அல்லது 5 விசில் வைத்து எடுத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை இரண்டாகவும் கீறி வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் போடவும். பெருஞ்சீரகம்...

அயிரை மீன் குழம்பு செய்ய தெரியுமா...?

Image
தேவையான பொருட்கள்: அயிரை மீன் - அரை கிலோ வெந்தயம் - அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 6 பல் புளி - 25 கிராம் மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் தேங்காய்ப் பால் - அரை தம்ளர் கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் கறிவேப்பிலை, சின்ன  வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு போட்டு நன்றாக வதக்குங்கள். அதில் தக்காளியை விழுதாக அரைத்துச்  சேருங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து, பொன்னிறமாகும்வரை வதக்குங்கள்.  பிறகு புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக்  கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்து பச்சை வாசனை போனதும் அயிரை மீன்களைப் போட்டு, ஐந்து நிமிடம் குறைந்த தீயில்  கொதிக்கவிடுங்கள். பிறகு தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும்.